Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் பெரோடுவா வாகனமோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் பெரோடுவா வாகனமோட்டி உயிரிழந்தார்

Share:

கிளந்தான், மார்ச் 27-

கிளந்தான், பச்சோக், ஜாலான் பத்தோர்-ரில் லாரியும் பெரோடுவா அல்ஜா ரக வாகனமும் விபத்துக்குள்ளானதில் அக்கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று மதியம் 1 மணியளவில், 43 வயது நோர் அஹ்மத் பட்ச்லி அப்துல் கனி ஓட்டிச் சென்ற பெரோடுவா அல்ஜா கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த எதிர்தடத்தில் நுழைந்ததோடு, அந்த லாரியின் வலது புறத்தை மோதிய பின், விபத்துக்குள்ளானதாக, பச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மொஹமட் இஸ்மாயில் ஜமாலுட்டின் தெரிவித்தார்.

அந்த விபத்தில் 35 வயது லோரி ஓட்டுநருக்கு நெற்றியில் காயமும் வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருப்பதாக மொஹமட் இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடல் சவப் பரிசோதனைக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநரை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக மொஹமட் இஸ்மாயில் விவரித்தார்.

Related News

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது