சபா, மே 08-
லஞ்ச ஊழல் வழக்கில் சபா அம்னோ தலைவரும், கிணபாத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினருமான பங் மொக்தார் ராடின்-னும், அவரின் மனைவி சிசி இசேத்தே அப்துல் சமத்-ட்டும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்த்து ஏன் எதிர்வாதம் புரிய வேண்டும் என்பதற்கு பிராசிகியூஷன் தரப்பினர் 7 முக்கிய காரணங்களை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
Felcra முதலீட்டில் 15 கோடி வெள்ளி லஞ்ச ஊழல் புரிந்ததாகவும், அந்த ஊழலுக்கு துணைப் போனதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட Bung Moktar-ரும், அவரின் மனைவி சிசி இசேத்தே அப்துல் சமத்- ட்டும் இந்த லஞ்ச ஊழலை புரிந்துள்ளனர் என்பதற்கு போதுமான முகாந்திரங்களுடன் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்ட போதிலும் அவ்விருவரையும் எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்து இருப்பது மூலம் உயர் நீதிமன்ற நீதிபதி தவறு இழைத்துள்ளார் என்று பிராசிகியூஷன் தரப்பு வாதிட்டுள்ளது.
கணவனையும், மனைவியையும் விடுதலை செய்து இருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கும் பிராசிகியூஷன் தரப்பினர், அந்த இருவரையும் எதிர்வாதம் புரிய அழைப்பதற்கு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் கூறப்பட்டுள்ள 7 காரணங்களில் கூடிய பட்ச அளவில் கவனம் செலுத்தி, அந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தனது மேல்முறையீட்டு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.








