Jun 30, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

Share:

அரசு ஊழியர்களுக்கு Flexible Working Hours எனும் நெகிழ்வான வேலை நேரத்தை வழங்குவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் குறிப்பிட்ட துறைகளில் உள்ளவர்களுக்குப் படிப்படியாக ‘வீட்டிலிருந்தே வேலை செய்யும்’ BDR முறையைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

வங்கிகள் மற்றும் சில நிறுவனங்கள் ஏற்கனவே இத்தகைய முறையைப் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தனியார் துறையினரும் தங்களது ஊழியர்களுக்கு இத்தகைய நெகிழ்வுத்தன்மையை வழங்க முன்வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், அரசாங்கம் தனது நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதிலும், நிர்வாகத்தில் வீணான செலவுகள் மற்றும் கசிவுகளைத் தடுப்பதிலும் உறுதியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

Related News