கூலாய், மார்ச் 17 -
கூலாய், கம்பூங் ஜெயா செதாப்பாக் டில் உள்ள பேருந்து நிலையத்தில் 37 வயதுடைய ஆடவர் ஒருவர் மதுபான டின் - னுடன் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலை 8:18 மணியளவில் சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்தில் அவ்வாடவர் சட்டை அணியாமல், சுயநினைவின்றி இருப்பதை அவ்வழியாக சென்ற ஒருவர் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரின்டென்டன் தான் செங் லீ தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதனை செய்த போது அவர் இறந்திருப்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியாக தான் செங் லீ விளக்கினார்.
மேல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட ஆடவரின் உடல் தெமெங்கூங் ஶ்ரீ மஹாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தான் செங் லீ கூறினார்.
இது ஒரு திடீர் மரணமே என்றும் மரணத்திற்கான காரணம் குறித்து தடயவியல் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் அவர் மேலும் அறிவித்தார்.








