Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கையூட்டு தொடர்பில் முன்னாள் Dato Bandar ஒருவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

கையூட்டு தொடர்பில் முன்னாள் Dato Bandar ஒருவர் கைது செய்யப்பட்டார்

Share:

ஜோகூர் மாநிலத்தில் மாநகர் ஒன்றுக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் Dato Bandar ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM - மினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

63 வயதுடைய அந்த முன்னாள் Dato Bandar நேற்று Johor Bahru - வில் உள்ள SPRM அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக SPRM தெரிவித்தது.

அந்த முன்னாள் Dato Bandar மாநகர் ஒன்றுக்கு Dato Bandar - ராக பொறுப்பேற்றிருந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை குத்தகையாளர்களிடம் சில திட்டங்களை அங்கீகரிப்பதற்கு 10 லட்சம் வெள்ளிக்கு மேல் கையூட்டு பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் தொடர்பில் விசாரணைக்கு ஏதுவாக அந்த Dato Bandar கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Johor, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk Azmi Alias உறுதிப்படுத்தினார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி