May 22, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூரில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!
தற்போதைய செய்திகள்

ஜொகூரில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 12-

ஜொகூரில் மெர்சிங், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு உள்ளிட்ட 3 மாவட்டங்களில், பலத்த காற்றும் இடியுடன் கூடிய கனமழை பொழியுமென மலேசிய வானிலை ஆய்வு துறை - MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் கூடுதலாக அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்த கனமழை 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்காது என MET MALAYSIA இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இவ்வேளையில், இன்று காலை மணி 8 வரைக்குமான நிலவரத்தின்படி, கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு IPU மிதமான அளவில் பதிவாகியுள்ளது. கிள்ளானில் 72, பன்த்திங்கில் 87, செராஸ்-சில் 81 என பதிவாகியுள்ளதாக, MET MALAYSIA அறிவித்துள்ளது.

Related News

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு