May 22, 2026
Thisaigal NewsYouTube
புறக்கணிக்கப்பட்டதால் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

புறக்கணிக்கப்பட்டதால் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது

Share:

செரம்பான், ஏப்ரல் 01 -

மூன்று வயது பெண் குழந்தையை புறக்கணித்ததுடன் அக்குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருந்ததாக ஒரு பெண் உட்பட அவரின் காதலர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டியுள்ளது.

இன்று நீதிபதி டத்தின் சுரிட்டா புடின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 42 வயதுடைய நொரைனி ஹரோன் மற்றும் அவரின் காதலரான 38 வயது மோஹட் கய்ரூல் சம்சுவா இஷ்ராக் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

அவ்விருவரும் வேண்டுமென்றே அக்குழந்தையை உயிரிழக்கும் அளவிற்கு புறக்கணித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் மாலை 6:45 மணி அளவில் போர்ட் டிக்சன், தாமான் மாயுங்-கில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவ்விருவர் மீதும் குற்றசாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அந்நபர்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு