கோலாலம்பூர், ஜூன் 04-
விவேக கைப்பேசிகளுக்கான அதிகாரப்பூர்வ தளங்களான Google Play, App Store ஆகியவற்றைத் தவிர, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பகிரப்பப்படும் APK எனப்படும் கைப்பேசி செயலி தொகுப்புகளை பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் தரவுகளையும் நிதி குறித்த தகவல்களையும் கொள்ளையிடும் நோக்கில், குற்றவாளிகள் பொதுமக்களின் கைப்பேசிகளை ஊடுருவதற்கு, அந்த அங்கீகாரமன்ற செயலிகளை பயன்படுத்துவதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
மக்களின் தரவுகளை கொள்ளையிட, கடந்த 2023ஆம் ஆண்டு மத்தியிலிருந்து, ஏமாற்றுப்பேர்வழிகள், திருமண அழைப்பு போன்ற வடிவங்களில் அந்த செயலிகளை குறுந்தகவல் வாயிலாக அனுப்புகின்றனர்.
அதனை உண்மை என நம்பி பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் அல்லது சொடுக்கும் போது, அவர்களின் தரவுகள் கொள்ளைப் போவதாக ராம்லி முகமது யூசுப் கூறினார்.








