தாம் கொண்டுள்ள மாந்திரீக சக்தியின் மூலம் நோயைப் குணப்படுத்துவதாக கூறி, மாது ஒருவரை மானப்பங்கம் செய்ததாக கூறப்படும் போமோ ஒருவர், கோலத்திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
62 வயதான ஜைனல் சே உமர் என்ற அந்த மாந்திரீகவாதி கடந்த ஜுன் 26 ஆம் தேதி திரெங்கானு, கோலா நெருஸ் என்ற இடத்தில் அரசாங்க குடியிருப்புப்பகுதியில் 31 வயது மாதுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் அந்த மாந்திரீகவாதி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


