தாம் கொண்டுள்ள மாந்திரீக சக்தியின் மூலம் நோயைப் குணப்படுத்துவதாக கூறி, மாது ஒருவரை மானப்பங்கம் செய்ததாக கூறப்படும் போமோ ஒருவர், கோலத்திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
62 வயதான ஜைனல் சே உமர் என்ற அந்த மாந்திரீகவாதி கடந்த ஜுன் 26 ஆம் தேதி திரெங்கானு, கோலா நெருஸ் என்ற இடத்தில் அரசாங்க குடியிருப்புப்பகுதியில் 31 வயது மாதுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் அந்த மாந்திரீகவாதி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


