தென்கிழக்காசியாவிலேயே மிக பழமையான தேவாலயமான மலாக்கா, பண்டார் ஹிலிரில் குன்றின் மீது அமைந்துள்ள செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று மலாக்கா அருங்காட்சி வாரியம் அறிவித்துள்ளது.
அந்த வரலாற்றுக்கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகமான அமலாக்க அதிகாரிகள் மலாக்கா மாநகர் மன்றம் மூலமாக கடமையில் அமர்த்தப்படுவர் என்று அந்த அருங்காட்சி வாரியத்தின் தலைவர் டத்தோ அக்ராமுடின் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
இன்று செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த 1511 ஆம் ஆண்டு மலாக்காவை கைப்பற்றிய போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட செயிண்ட் பால்ஸ் தேவாலய கட்டடத்தின் சில பகுதிகள் பொறுப்பற்ற நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த தேவாலயத்தில் உடைந்த சிதிலங்களை அக்ராமுடின் அப்துல் அஸீஸ் பார்வையிட்டார்.

Related News

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன


