சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சரக்குப் பிரிவிலிருந்து 12 லட்ச வெள்ளி பெறுமானமுள்ள 20.14 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது மூலம் பெரியளவில் போதைப்பொருள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அரச மலேசிய சுங்கத்துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி மத்திய ஆசிய நாடு ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களில், அந்த போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்ததாக சுங்கத்துறையின் துணைத்தலைமை இயக்குநர் சசாலி முகமட் தெரிவித்தார்.
20 பிளாஸ்டிக் பைகளினால் சுற்றப்பட்டிருந்த அந்த போதைப்பொருள் நெகிரி செம்பிலான், நீலாயில் கொண்டுச் சேர்ப்பதற்கு முகவரி இடப்பட்டிருந்தது. எனினும், அந்த முகவரி போலியானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சசாலி குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


