Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கும்படி வற்புறுத்துகின்ற இந்திய தலைவர்கள் - வி.பாப்பாராய்டு சாடினார்
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கும்படி வற்புறுத்துகின்ற இந்திய தலைவர்கள் - வி.பாப்பாராய்டு சாடினார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்காக, இந்திய வாக்காளர்களைச் சந்தித்துவரும் இந்திய தலைவர்களை உட்படுத்திய குழு ஒன்று, அத்தேர்தலை புறக்கணிக்கும்படி, வாக்காளர்களை வற்புறுத்துவதாக, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.பாப்பாராய்டு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்தித்துவரும் அத்தரப்பினர், அவர்களை எதிர்க்கட்சியினருக்கு நெருக்கமானவர்களாக காட்டிக்கொள்வதோடு, வரக்கூடிய தேர்தலை புறக்கணிக்கும்படி அவர்களை வலியுறுத்துவதாக பாப்பாராய்டு கூறினார்.

அவர்களின் அச்செயல் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டரசு அரசியலைமைப்புக்கு முரணாக அத்தகைய நடவடிக்கையை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது என்பது அவரவர் உரிமை. மக்களை வாக்களிக்க கூடாது என்று அத்தரப்பினரால் எப்படி கூற முடியும் என்று பாப்பாராய்டு கேள்வியெழுப்பினார்.

இதனிடையே, அதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டை முன்வைக்காமல், இடைத்தேர்தலை புறக்கணிக்ககூறும் நபர்களின் பெயர்களை பாப்பாராய்டு வெளியிட வேண்டும் என உரிமை கட்சியின் தலைவரும், பினாங்கு முன்னாள் துணைமுதலமைச்சருமான டாக்டர் பி. ராமசாமி கேட்டுக் கொண்டார்.

நடப்பு ஒற்றுமை அரசாங்கம், இந்திய சமூகத்திற்கு நியாயமாக நடந்துக்கொள்ளாததால், வரவிருக்கும் இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹாராப்பானுக்கு வாக்களிக்க வேண்டாமென, அங்குள்ள வாக்காளர்களை தாங்கள் கேட்டுக்கொள்ளவிருப்பதாக பி. ராமசாமி சாடினார்.

பேரிக்காதான் நசியனாலுக்கு உரிமை கட்சியின் வெளிப்படையான ஆதரவை அவர் தெரிவிக்காவிட்டாலும், எதிர்க்கட்சியினர் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் ராமசாமி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்