Mar 19, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை

Share:

டாமன்சாரா, மார்ச் 25.

கடந்த வாரம் டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாவலர் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளி பணக்கட்டுகளை கொண்ட பணப் பெட்டி, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை தங்களால் உறுதி செய்ய இயலவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசெய்ன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

அந்த பணப்பெட்டி தன்னுடையது என்று நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் கூறிக்கொண்ட போதிலும் அவர் இதுவரையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை

அதேவேளையில் பணக்கட்டுகளை கொண்ட அந்தப் பணப்பெட்டி தகவல் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்று கூறப்பட்டாலும் அந்த நிறுவனம் இதுவரையில் அந்தப் பணப்பெட்டி மீது உரிமை கோரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் அந்த பணப்பெட்டி, யாரும் கோரப்படாத உடமை என்றே போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக டத்தோ ஹூசெய்ன் ஒமார் தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை