மெக்ஸ் ( MEX ) எனப்படும் கோலாலம்பூர் - புத்ராஜெயா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில் இரு வாகனங்கள் தீப்பற்றிக்கொண்டன. இச்சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் நிகழ்ந்தது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த 14 பேரை உள்ளடக்கிய தீயணைப்பு படையினர் அவ்விரு வாகனங்களிலும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்திய போதிலும் இரு வாகனங்களும் 100 விழுக்காடு முற்றாக அழிந்தன.
நிஸ்ஸான் க்ஷ்- ட்ரெல் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


