மெக்ஸ் ( MEX ) எனப்படும் கோலாலம்பூர் - புத்ராஜெயா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில் இரு வாகனங்கள் தீப்பற்றிக்கொண்டன. இச்சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் நிகழ்ந்தது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த 14 பேரை உள்ளடக்கிய தீயணைப்பு படையினர் அவ்விரு வாகனங்களிலும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்திய போதிலும் இரு வாகனங்களும் 100 விழுக்காடு முற்றாக அழிந்தன.
நிஸ்ஸான் க்ஷ்- ட்ரெல் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


