மெக்ஸ் ( MEX ) எனப்படும் கோலாலம்பூர் - புத்ராஜெயா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில் இரு வாகனங்கள் தீப்பற்றிக்கொண்டன. இச்சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் நிகழ்ந்தது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த 14 பேரை உள்ளடக்கிய தீயணைப்பு படையினர் அவ்விரு வாகனங்களிலும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்திய போதிலும் இரு வாகனங்களும் 100 விழுக்காடு முற்றாக அழிந்தன.
நிஸ்ஸான் க்ஷ்- ட்ரெல் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


