Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் முதலமைச்சர் மறுபடியும் நியமிக்க முடியாது
தற்போதைய செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் மறுபடியும் நியமிக்க முடியாது

Share:

பினாங்கு மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் இரண்டு தவணைக்காலம் அப்பொறுப்பில் இருந்து இருப்பார்களேயானால் அவர்கள் மறுபடியும் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் சௌ கொன் யோவ் தெரிவித்துள்ளார்.

பினாங்கு முதலமைச்சர் பதவியை ஒருவர் இரண்டு தவணைக்காலம் மட்டுமே வகிக்க முடியும் என்று மாநில அரசியலமைப்பு சட்டத்தின் 7 ஆவது விதி திருத்தப்பட்டு இருப்பதை சௌ கொன் யோவ் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இரண்டு தவணைக்காலம் பினாங்கு முதலமைச்சர் பதவியை வகித்து விட்ட ஜசெகா தலைவர் லிம் குவான் எங், மறுபடியும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில் சௌ கொன் யோவ் கருத்துரைத்தார்.

Related News