Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜெயின் ராயன் பெற்றோரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படவுள்ளது.
தற்போதைய செய்திகள்

ஜெயின் ராயன் பெற்றோரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படவுள்ளது.

Share:

டாமான்சாரா, ஜூன் 06-

ஆட்டிசம் குறைபாடுடைய 6 வயது சிறுவன் ஜெயின் ராயன் அப்துல் மதின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவரது பெற்றோரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படவுள்ளது.

அத்தம்பதியரின் 7 நாள் தடுப்புக்காவல் நாளையுடன் முடிவடையவிருக்கும் சூழலில், அதனை நீட்டிப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதிக் கோரப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் கூறினார்.

அவ்விருவருவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறும் முயற்சியில், விசாரணை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சிலாங்கூர், டாமான்சார டாமாய்-லுள்ள அடுக்ககத்திற்கு அருகாமையில் இருந்த கால்வாயில் சிறுவன் ஜெயின் ராயன் சடலமாக மீட்கப்பட்டார்.

அது குறித்து விசாரணையை நடத்திவந்த போலீஸ், கடந்த வெள்ளிக்கிழமை அவரது பெற்றோரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி