Mar 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் எரிபொருள் போதுமான அளவில் உள்ளது; பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்” – அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் எரிபொருள் போதுமான அளவில் உள்ளது; பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்” – அமைச்சர் தகவல்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.25-

மலேசியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் LPG எரிவாயு விநியோகமானது தற்போது நிலையாக உள்ளதாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இதுவரை எந்தவித பற்றாக்குறையும் பதிவாகவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் யாரும் அது குறித்துப் பதற்றமடைய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலங்களில் தேவைகள் அதிகரித்ததால் சில இடங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே விநியோகத் தாமதங்கள் ஏற்பட்டதாகவும், அவை போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக இருந்ததாகவும் அர்மிஸான் விளக்கமளித்துள்ளார்.

தற்போது அந்தச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விநியோகம் சீராக நடைபெறுவதற்காக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News