Mar 20, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் 6 ஆயிரத்து 34 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

நாட்டில் 6 ஆயிரத்து 34 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

கடந்த திங்கட்கிழமை தொடங்கி, நாடு தழுவிய நிலையிலுள்ள பள்ளிகளில், சுமார் 6 ஆயிரத்து 34 புதிய ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயிரத்து 858 ஆசிரியர்கள் இடைநிலைப்பள்ளிகளிலும் 4 ஆயிரத்து 176 ஆசிரியர்கள் ஆரம்பப்பள்ளிகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக, கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள சேவையின் தேவை, காலி பணியிடங்கள், பள்ளிகளில் பாடத் தேர்வு ஆகிய மூன்று கூறுகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணிக்கு அமர்த்திய கல்வி சேவை ஆணையத்திற்கு நன்றியைக் கூறிக்கொண்ட கல்வி அமைச்சு, ஆசிரியர் பற்றாக்குறை விவகாரங்களைக் களைய அந்த ஆணையத்துடன் தொடர்ந்து ஒத்துழைக்கப்படும் என கூறியது.

Related News