மைகாட் அடையாள அட்டையை மூன்றாவது முறையாக தொலைத்தால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பதிவு இலாகாவான ஜே.பி.என் தலைமை இயக்குநர் சம்ரி மிஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் நாடு முழுவதும் சராசரி 8 ஆயிரம் மைகாட் அட்டைகள் காணாமல் போவதாக தேசிய பதிவு இலாகா புகார்களை பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரி 2 லட்சம் மைகாட் அடையாள அட்டைகளை தேசிய பதிவு இலாகா வெளியிடுகிறது. இதில் சராசரி 4 விழுக்காடு அட்டைகள் தொலைக்கப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன என்று சம்ரி மிஸ்மான் தெரிவித்தார்.
மைகாட் அடையாள அட்டை தொலைக்கப்படும் பட்சத்தில் அந்த முக்கிய அடையாள ஆவணம், பொறுப்பற்ற நபர்களால் தவறாக பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. எனவே அந்த அதிகாரத்துவ ஆவணைத்தை பொது மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

தற்போதைய செய்திகள்
மைகாட் அடையாள அட்டையை மூன்றாவது முறையாக தொலைத்தால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம்
Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


