மைகாட் அடையாள அட்டையை மூன்றாவது முறையாக தொலைத்தால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பதிவு இலாகாவான ஜே.பி.என் தலைமை இயக்குநர் சம்ரி மிஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் நாடு முழுவதும் சராசரி 8 ஆயிரம் மைகாட் அட்டைகள் காணாமல் போவதாக தேசிய பதிவு இலாகா புகார்களை பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரி 2 லட்சம் மைகாட் அடையாள அட்டைகளை தேசிய பதிவு இலாகா வெளியிடுகிறது. இதில் சராசரி 4 விழுக்காடு அட்டைகள் தொலைக்கப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன என்று சம்ரி மிஸ்மான் தெரிவித்தார்.
மைகாட் அடையாள அட்டை தொலைக்கப்படும் பட்சத்தில் அந்த முக்கிய அடையாள ஆவணம், பொறுப்பற்ற நபர்களால் தவறாக பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. எனவே அந்த அதிகாரத்துவ ஆவணைத்தை பொது மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

தற்போதைய செய்திகள்
மைகாட் அடையாள அட்டையை மூன்றாவது முறையாக தொலைத்தால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம்
Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்


