மைகாட் அடையாள அட்டையை மூன்றாவது முறையாக தொலைத்தால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பதிவு இலாகாவான ஜே.பி.என் தலைமை இயக்குநர் சம்ரி மிஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் நாடு முழுவதும் சராசரி 8 ஆயிரம் மைகாட் அட்டைகள் காணாமல் போவதாக தேசிய பதிவு இலாகா புகார்களை பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரி 2 லட்சம் மைகாட் அடையாள அட்டைகளை தேசிய பதிவு இலாகா வெளியிடுகிறது. இதில் சராசரி 4 விழுக்காடு அட்டைகள் தொலைக்கப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன என்று சம்ரி மிஸ்மான் தெரிவித்தார்.
மைகாட் அடையாள அட்டை தொலைக்கப்படும் பட்சத்தில் அந்த முக்கிய அடையாள ஆவணம், பொறுப்பற்ற நபர்களால் தவறாக பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. எனவே அந்த அதிகாரத்துவ ஆவணைத்தை பொது மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

தற்போதைய செய்திகள்
மைகாட் அடையாள அட்டையை மூன்றாவது முறையாக தொலைத்தால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம்
Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது


