பேரா மாநிலத்தில் இந்திய சமூகத்தைச் சேந்த 7 கிராமத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் அறிவித்தார். இந்த நியமனங்கள் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த நியமனங்கள் நடைபெற்று வருவதாக சிவநேசன் குறிப்பிட்டார்.
பல இந்திய கிராமங்கள் இருந்தாலும் முதல் கட்டமாக 7 கிராமங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக டத்தோ சிவநேசன் தெரிவித்தார். முன்பு இந்த நியமனங்கள் வருடாந்திர அடிப்படையில் நடைபெற்றது என்றும் இந்த முறை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது என்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய அலவன்ஸ் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் விளக்கினார்.
ஊத்தான் மெலிந்தாங், கம்போங் காமாட்சி கிராமத்துக்கு அருள்பிரகாசம் பெருமாள், கம்போங் சுங்கை சுமூன் கிராமத்துக்கு ராமநாயுடு ராமுடு, கம்போங் துன் சம்பந்தன் கிராமத்துக்கு வனஜா இராமசாமி, சித்தியவான், கம்போங் புண்டூட் கிராமத்துக்கு கணேசன் செங்கையா, பகான் செராய் கம்போங் சுன் லீ கிராமத்துக்கு சற்குணன் சுப்பையா, கம்போங் கிந்தாவேலி கிராமத்துக்கு கோபிந்த் கிருஷ்ணசாமி மற்றும் கம்போங் ஹெண்ட்ரா மற்றும் கம்போங் செங்காய் கிராமத்துக்கு செல்வி முனுசாமி நியக்கப்பட்டுள்ளதாக சிவநேசன் விவரித்தார்.
கம்போங் ஹெண்ட்ரா மற்றும் கம்போங் செங்காய் கிராமத்துக்கு செல்வி முனுசாமி மற்றும் கம்போங் புண்டூம் கிராமத்துக்கு கணேசன் செங்கையா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமத்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
கிராமத் தலைவர்களாக நியமனம் பெற்ற ஏழு பேரும் டத்தோ சிவநேசனுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.








