Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வர்த்தகப் பெண்மணிக்கு 35 லட்சம் வெள்ளி இழப்பு
தற்போதைய செய்திகள்

வர்த்தகப் பெண்மணிக்கு 35 லட்சம் வெள்ளி இழப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 -

தனது வீட்டின் இரும்புப்பெட்டகம் கொள்ளையிடப்பட்டதில் வர்த்தகப்பெண்மணி ஒருவர் 35 லட்சம் வெள்ளியை இழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றக்கிழமை இரவு 10 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜுவிற்கு உட்பட்ட பாடாங் பெசார் ங்கில் நிகழ்ந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை உணர்ந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, ரகசிய கேமராவை சேதப்படுத்திவிட்டு, வீட்டில் தங்கக்கட்டிகள் மற்றும் ரொக்கப்பணம் வைக்கப்பட்டு இருந்த இரும்புப்பெட்டகத்தை திருடிச்சென்றுள்ளனர் என்று 43 வயது வர்த்தகப்பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்று வங்சா மாஜு மாவட்ட பேழலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கொண்டிருப்பவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Related News