May 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா அறவே கண்டு கொள்ளாது
தற்போதைய செய்திகள்

மலேசியா அறவே கண்டு கொள்ளாது

Share:

சபா, மார்ச் 9 -

சபா, சூலு சுல்தான் பிரதேசத்திற்கு உட்பட்ட காப்பாளர்கள் என்ற தங்களை அடையாளம் கூறிக்கொண்டு மலேசியாவிடமிருந்து 7 ஆயிரம் கோடி வெள்ளியை இழப்பீடாக கோரும் United Tausug Citizen என்ற அமைப்பினரின் எந்தவொரு கோரிக்கையையும் மலேசியா கண்டு கொள்ளாது என்று சட்டத்துறை அமைச்சர் அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்தார்.

சபாவின் பிரதேச உரிமையை ஒப்படைத்தற்காக மலேசியா தங்களிடம் கடன் பெற்றுள்ளது என்று கூறிக்கொண்டு 7 ஆயிரம் கோடி வெள்ளி அல்லது 1,500 கோடி அமெரிக்க டாலர் தாங்களுக்கு உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரி வருவதாக அசாலினா குறிப்பிட்டுள்ளார்.

சபாவில் பிரதேச உரிமையை கொண்டுள்ளதாகவும், தாங்கள் கோரிய இழப்பீட்டுத் தொகையை தரவில்லை என்றால் அமெரிக்காவில் மலேசியாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அமைப்பு மிரட்டி வரவதாக அசாலினா தெரிவித்துள்ளார்.

Related News