Mar 22, 2026
Thisaigal NewsYouTube
காரை திருடிக்கொண்டு தப்பிய ஆடவரை பிடிக்க போலீசார்
தற்போதைய செய்திகள்

காரை திருடிக்கொண்டு தப்பிய ஆடவரை பிடிக்க போலீசார்

Share:

குவாந்தான், ஜூன் 04-

எண்ணெய் நிலையத்தில் நிறுத்தப்பட்ட காரில் வயதான தம்பதியர் அமர்ந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் காரை திருடிக்கொண்டு தப்பிச்சென்ற ஆடவர் ஒருவரை பகாங் மாநில போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்று திங்ட்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் குவந்தான், செமாம்பு எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒரு கணக்காய்வாளரான 38 வயது மாது தனக்கு சொந்தமான ஹோண்டா சிட்டி காரை பறிகொடுத்தப் போதிலும், காரில் அமர்ந்திருந்த தனது 77 வயது தந்தையையும், 66 வயது தாயாரையும் அந்த ஆசாமி சுமார் 400 மீட்டர் தூரத்தில் சாலையோரத்தில் இறக்கிவிட்டு சென்றது மூலம் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

எண்ணெய் நிரப்புவதற்காக அந்த மாது காரை நிறுத்தி விட்டு, எண்ணெய் நிலையத்திற்கு சென்ற போது, கார் திடீரென்று நகர்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்ததாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் முகமது ஜஹாரி தெரிவித்தார்.

கோலாலம்பூர், செந்தூலைச் சேர்ந்த அந்த மூத்த தம்பதியர் இச்சம்பவத்தில் காயமடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அந்த காரை களவாடுவதற்கு அந்த ஆசாமி, பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஏற்கனவே காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டதாகும் என்று வான் முகமது ஜஹாரி குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி