Jul 27, 2026
Thisaigal NewsYouTube
செய்தி வாசிப்பாளரிடம் விசாரணை; போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

செய்தி வாசிப்பாளரிடம் விசாரணை; போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

அண்மையில் இரு போலீஸ் உறுப்பினர்கள் தம்மிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்த செய்தி வாசிப்பாளரிடம் போலீஸ் விசாரணையை மேற்கொள்வது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயல் என மனித உரிமை அமைப்பான Lawyers for Liberty அமைப்பின் ஆலோசகர் ன்.சுரென்டரன் சாடினார்.

சம்பந்தப்பட்ட செய்தி வாசிப்பாளருக்கு எதிரான விசாரணையைக் கைவிட வேண்டும். அவரை தண்டிக்கும் வகையில் செயல்படுவதைவிட, அவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு போலீஸ் ஏற்புடைய வகையில் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை விடுத்தார்.

போலீசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைப்பது எப்போதிலிருந்து ஒரு குற்றச்செயலாக ஆனது? Subang Jaya போலீஸ் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது வியப்பளிப்பதாகவும் ன்.சுரென்டரன்கூறினார்.

கடந்த 13ஆம் தேதி சுபாங் ஜெயா USJ 9-னிலுள்ள வீடமைப்பு பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்திருந்த இரு போலீஸ் உறுப்பினர்கள், தம்மிடம் சோதனையை மேற்கொண்ட போது மோசமாக நடந்துக்கொண்டதாக கூறியிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்