Mar 18, 2026
Thisaigal NewsYouTube
செய்தி வாசிப்பாளரிடம் விசாரணை; போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

செய்தி வாசிப்பாளரிடம் விசாரணை; போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

அண்மையில் இரு போலீஸ் உறுப்பினர்கள் தம்மிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்த செய்தி வாசிப்பாளரிடம் போலீஸ் விசாரணையை மேற்கொள்வது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயல் என மனித உரிமை அமைப்பான Lawyers for Liberty அமைப்பின் ஆலோசகர் ன்.சுரென்டரன் சாடினார்.

சம்பந்தப்பட்ட செய்தி வாசிப்பாளருக்கு எதிரான விசாரணையைக் கைவிட வேண்டும். அவரை தண்டிக்கும் வகையில் செயல்படுவதைவிட, அவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு போலீஸ் ஏற்புடைய வகையில் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை விடுத்தார்.

போலீசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைப்பது எப்போதிலிருந்து ஒரு குற்றச்செயலாக ஆனது? Subang Jaya போலீஸ் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது வியப்பளிப்பதாகவும் ன்.சுரென்டரன்கூறினார்.

கடந்த 13ஆம் தேதி சுபாங் ஜெயா USJ 9-னிலுள்ள வீடமைப்பு பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்திருந்த இரு போலீஸ் உறுப்பினர்கள், தம்மிடம் சோதனையை மேற்கொண்ட போது மோசமாக நடந்துக்கொண்டதாக கூறியிருந்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை