Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாரா திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஐவர் பலி
தற்போதைய செய்திகள்

மாரா திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஐவர் பலி

Share:

துவாரான், செப்டம்பர்.05-

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கோத்தா கினபாலு, மாரா திறன் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சபா, துவாரான், பூசாட் லதிஹான் ரேலா துவாரான் அருகில் ஜாலான் சுலாமான் காயாங்கில் நிகழ்ந்தது.

டிரெய்லர் லோரியும், மாணவர்கள் பயணித்த காரும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் 20 வயது மதிக்க ஐந்து மாணவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஐவரின் உடல்களும் தீயணைப்பு, மீட்புப்படை உதவியுடன் மீட்கப்பட்டன.

Related News