சொந்தச் சகோதரி மற்றும் அவரின் கணவரால் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 18 வயது பரமேஸ்வரி செல்லகுமாரன், தற்போது சிகமாட் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்.அந்தப் பெண்ணை இன்று நேரில் சென்று நலம் விசாரித்த சிகமாட் எம்.பி. ஆர். யுனேஸ்வரன், அப்பெண்ணை சமூக நல இலாகாவின் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதாக தெரிவித்தார்.
ஜோகூர், சிகமாட் பத்து 6, லாடாங் தம்பாங் தோட்டத்தில் தமது சகோதரியில் இல்லத்தில் தங்கியிருந்த அந்த இளம் பெண் சொந்த சகோதரியாலும், அவருடைய கணவராலும் சித்ரவதை செய்யப்பட்டு வந்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்.
கண்களின் கீழ்ப்பகுதியிலும், மேல்பகுதியிலும் காது, நாக்கிலும் பல முறை கரண்டியால் சூடு போட்டதற்கான தழும்புகளுடம் காணப்பட்ட நிலையில், தொடர்ந்து சித்ரவதைக்கு ஆளான அந்த இளம் பெண், தோட்டத்து மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


