சொந்தச் சகோதரி மற்றும் அவரின் கணவரால் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 18 வயது பரமேஸ்வரி செல்லகுமாரன், தற்போது சிகமாட் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்.அந்தப் பெண்ணை இன்று நேரில் சென்று நலம் விசாரித்த சிகமாட் எம்.பி. ஆர். யுனேஸ்வரன், அப்பெண்ணை சமூக நல இலாகாவின் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதாக தெரிவித்தார்.
ஜோகூர், சிகமாட் பத்து 6, லாடாங் தம்பாங் தோட்டத்தில் தமது சகோதரியில் இல்லத்தில் தங்கியிருந்த அந்த இளம் பெண் சொந்த சகோதரியாலும், அவருடைய கணவராலும் சித்ரவதை செய்யப்பட்டு வந்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்.
கண்களின் கீழ்ப்பகுதியிலும், மேல்பகுதியிலும் காது, நாக்கிலும் பல முறை கரண்டியால் சூடு போட்டதற்கான தழும்புகளுடம் காணப்பட்ட நிலையில், தொடர்ந்து சித்ரவதைக்கு ஆளான அந்த இளம் பெண், தோட்டத்து மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


