கோலாலம்பூர், மார்ச்.25-
2025-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதி குறியீட்டில் மலேசியா உலகில் 13-வது இடத்தையும், ஆசியான் பிராந்தியத்தில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டத்தில் பேசிய அவர், நாட்டின் குற்றச்செயல்கள் 6.4 விழுக்காடு சரிந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார். எல்லைப் பாதுகாப்பு மற்றும் நாடு தழுவிய தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.
எனினும், தற்போதைய பாதுகாப்பு சூழல் சிக்கலாகி வருவதாகவும், போலீஸ் துறை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் சவால்களை எதிர்கொள்ள போலீஸ் படை எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








