May 22, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளை, இருவருக்கு போலீசார் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

கொள்ளை, இருவருக்கு போலீசார் வலை வீச்சு

Share:

உலு திரங்கானு, மார்ச் 14 -

ஒரு தம்பதியர் தங்கியிருந்த வாடகை அறையில் நுழைந்து, கத்தி முனையில் மிரட்டி 32 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக நம்பப்படும் இரு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜோங் என்ற இடத்தில் கடந்த வாரம் புதன்கிழமை பின்னிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 48 வயது கணவரும், 41 வயது மனைவியும் காயம் அடையவில்லை என்றாலும் அவர்கள் இன்னமும் பீதியில் மூழ்கியுள்ளதாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி.அகமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

ஓர் உணவகத்தில் சமையல்காரராகப் பணிபுரியும் அந்த ஆடவர், தனது மனைவியுடன் தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் அறையில் நுழைந்த அடுத்த கணமே இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளதாக தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுட்டுள்ளார். என்று ACP Ahmad Adnan குறிப்பிட்டார்.

Related News