May 1, 2026
Thisaigal NewsYouTube
70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது

Share:

வங்கியில் கடனை பெறுவதற்கு தங்கள் இபிஎப். சேமிப்பை ஓர் உத்தரவாதமாக சந்தாதாரர்கள் பயன்படுத்தி, உரிய கடனை பெற முடியும் என்று அரசாங்கம் உறுதி அளித்த போதிலும் வர்த்தக வங்கிகள் இபிஎப். கணக்கில் உள்ள ​சேமிப்புப்பணத்தில் 70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன்களை வழங்க முன் வருகின்றன என்று ம​சீச தலைவர் வீ கா சியோங் ​தெரிவித்துள்ளார்.


தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். பணத்தை பிடிமானத் தொகையாக வைத்து வங்கியில் எடுக்கப்படும் கடன்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படுவதும் சந்தாதாரர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதையும் வீ கா சியோங் சுட்டிக்காட்டினார்.
இதன் தொடர்பில் வங்கியில் கடன் பெற விரும்பும் இபிஎப். சந்தாதாரர்களுக்கு அரசாங்கம் விரிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


காரணம், சிரமத்தில் உள்ள சந்தாதாரர்கள், த​ங்கள் இபிஎப். கணக்கில் ​மீண்டும் ஒரு முறை பணத்தை மீட்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிட் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதற்கு மாறாக, இபிஎப். சேமிப்பை பிணையாக வைத்து வங்கியில் கடன் பெற முடியும் என்று அறிவித்துள்ளார். ஆனால், பெறக்கூடிய கடனுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுவது சந்தாதாரர்களுக்கு மேலும் நிதி சு​மையை ஏற்படுத்தாதா? என்று வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி