Jun 15, 2026
Thisaigal NewsYouTube
70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது

Share:

வங்கியில் கடனை பெறுவதற்கு தங்கள் இபிஎப். சேமிப்பை ஓர் உத்தரவாதமாக சந்தாதாரர்கள் பயன்படுத்தி, உரிய கடனை பெற முடியும் என்று அரசாங்கம் உறுதி அளித்த போதிலும் வர்த்தக வங்கிகள் இபிஎப். கணக்கில் உள்ள ​சேமிப்புப்பணத்தில் 70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன்களை வழங்க முன் வருகின்றன என்று ம​சீச தலைவர் வீ கா சியோங் ​தெரிவித்துள்ளார்.


தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். பணத்தை பிடிமானத் தொகையாக வைத்து வங்கியில் எடுக்கப்படும் கடன்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படுவதும் சந்தாதாரர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதையும் வீ கா சியோங் சுட்டிக்காட்டினார்.
இதன் தொடர்பில் வங்கியில் கடன் பெற விரும்பும் இபிஎப். சந்தாதாரர்களுக்கு அரசாங்கம் விரிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


காரணம், சிரமத்தில் உள்ள சந்தாதாரர்கள், த​ங்கள் இபிஎப். கணக்கில் ​மீண்டும் ஒரு முறை பணத்தை மீட்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிட் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதற்கு மாறாக, இபிஎப். சேமிப்பை பிணையாக வைத்து வங்கியில் கடன் பெற முடியும் என்று அறிவித்துள்ளார். ஆனால், பெறக்கூடிய கடனுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுவது சந்தாதாரர்களுக்கு மேலும் நிதி சு​மையை ஏற்படுத்தாதா? என்று வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்