Jan 18, 2026
Thisaigal NewsYouTube
70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது

Share:

வங்கியில் கடனை பெறுவதற்கு தங்கள் இபிஎப். சேமிப்பை ஓர் உத்தரவாதமாக சந்தாதாரர்கள் பயன்படுத்தி, உரிய கடனை பெற முடியும் என்று அரசாங்கம் உறுதி அளித்த போதிலும் வர்த்தக வங்கிகள் இபிஎப். கணக்கில் உள்ள ​சேமிப்புப்பணத்தில் 70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன்களை வழங்க முன் வருகின்றன என்று ம​சீச தலைவர் வீ கா சியோங் ​தெரிவித்துள்ளார்.


தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். பணத்தை பிடிமானத் தொகையாக வைத்து வங்கியில் எடுக்கப்படும் கடன்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படுவதும் சந்தாதாரர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதையும் வீ கா சியோங் சுட்டிக்காட்டினார்.
இதன் தொடர்பில் வங்கியில் கடன் பெற விரும்பும் இபிஎப். சந்தாதாரர்களுக்கு அரசாங்கம் விரிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


காரணம், சிரமத்தில் உள்ள சந்தாதாரர்கள், த​ங்கள் இபிஎப். கணக்கில் ​மீண்டும் ஒரு முறை பணத்தை மீட்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிட் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதற்கு மாறாக, இபிஎப். சேமிப்பை பிணையாக வைத்து வங்கியில் கடன் பெற முடியும் என்று அறிவித்துள்ளார். ஆனால், பெறக்கூடிய கடனுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுவது சந்தாதாரர்களுக்கு மேலும் நிதி சு​மையை ஏற்படுத்தாதா? என்று வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!