Mar 10, 2026
Thisaigal NewsYouTube
விஷம் கலந்த ​நீரைப் பருகிய 25 எருமைகள் மடிந்தன, போ​லீசார் ஆராய்கின்றனர்
தற்போதைய செய்திகள்

விஷம் கலந்த ​நீரைப் பருகிய 25 எருமைகள் மடிந்தன, போ​லீசார் ஆராய்கின்றனர்

Share:

போர்ட்டிக்சன்,ஜாலான் லிங்கி, கம்போங் பாரிசான் என்ற இடத்தில் விஷம் கலந்த நீரைப் பருகிய 25 எருமைகள் மடிந்ததாக​ அதன் உரிமையாளர்களான இரு​ இந்திய சகோதர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் தங்களுக்கு சொந்தமான மேலும் 30 எருமைகள் காணவில்லை என்று 25 வயது யுவன்குமாரன் குணாளன் மற்றும் அவரின் சகோதரர் 19 வயது புவேந்திரன் குணாளன் புகார் அளித்துள்ளனர்.

நூற்றுக்கு மேற்பட்ட கால் நடைகளை வளர்த்து வரும் அந்த சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமான எருமைகள் அருகில் உள்ள தோட்டத்திற்கு மேய்ச்சலுக்கு சென்றிருந்த வேளையில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக போ​லீஸ் புகார் ஒன்றை நேற்று மாலை 4.30 மணியளவில் தாங்கள் பெற்றுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிந்தென்டன் ஐடி ஷாம் முஹமாட் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 428 ​பிரிவின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.இந்த பாதகத்தை செய்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, குற்றம் உறுதி செய்யப்பட்டால் கூடிய பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று ஐடி ஷாம் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு