டாமான்சாரா, மே 06-
டாமான்சாரா-வில் உள்ள ஒரு பேரங்காடியில் நேற்று சிலாங்கூர் FC நட்சத்திரமான பைசால் ஹலீம் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகிக்கும் 20 வயதுடைய அந்நபர் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உதவும் வகையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமர் கான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வாக்குமூலங்களை போலீசார் பெற்றிருப்பதாகவும் விசாரணைக்கு உதவும் வகையில் பல சாட்சியங்களை போலீஸ் தரப்பு சேகரித்து வரும் வேளையில் இச்சம்பவத்தை குறித்த நோக்கம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக உசேன் ஒமர் கூறினார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பைசால் ஹலீம் ஆசாமிகளால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.








