வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விடுத்தள்ள அழைப்பானது , அவரின் தனிப்பட்ட கருத்தாகும் என்று மசீச தலைவர் டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
ஜாஹிட் விடுத்துள்ள கோரிக்கையானது, அது அவரின் தனிப்பட்ட கண்ணோட்டமே தவிர அது பாரிசான் நேஷனல் கூட்டணியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.
காரணம், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தை அடுத்த பொதுத் தேர்தலிலும் தற்காத்துக்கொள்வது என்பது பாரிசான் நேஷனல் கூட்டத்தில் அதன் தலைவர் என்ற முறையில் அகமட் ஜாஹிட், எந்தவொரு உறுப்புக்கட்சியுடனும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று வீ கா சியோங் விளக்கினார்.








