Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களை PVC குழாய்களால் தாக்கிய நான்கு பேர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவர்களை PVC குழாய்களால் தாக்கிய நான்கு பேர் கைது

Share:

காஜாங், மார்ச் 19 -

காஜாங், சுங்கை லோங் கில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுடன் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை 3:04 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சந்தேகிக்கும் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் மொகமாட் சைட் ஹாசான் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது இரண்டு பள்ளி மாணவர்களை 10 பேர் கொண்ட குழு ஒன்று paip polyvinyl chloride (PVC) குழாய்கள் உட்பட இரும்பு கம்பிகளை பயன்படுத்தி தாக்கியதாக மொகமாட் சைட் கூறினார்.

பாதிக்கப்பட்ட 16 மற்றும் 17 வயதுடைய அம்மாணவர்கள் தாக்கப்பட்டத்தில் உடலிலும் தலையிலும் கடும் காயத்திற்கு ஆளாகி காஜாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கினார்.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு வெவ்வேறு வாகனங்களில் தப்பி சென்ற 18 முதல் 21 வயதிற்கு உட்பட்ட நான்கு பேரை போலீசார் அம்பாங்கில் கைது செய்துள்ளதாக மொகமாட் சைட் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மார்ச் 22 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன் சம்பவம் நிகழ்ந்த காரணத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக மொகமாட் சைட் மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்