Jan 24, 2026
Thisaigal NewsYouTube
சண்டையிட்டு ரகளைப் புரிந்தாக 9 பேர் ​மீது குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

சண்டையிட்டு ரகளைப் புரிந்தாக 9 பேர் ​மீது குற்றச்சா​ட்டு

Share:

கிள்ளான், தெப்பி சுங்கை, வீடமைப்புப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கைகலப்பு மற்றும் ரகளையில் ஈடுபட்டதாக ஒன்பது இந்திய நபர்கள், நேற்று கிள்ளான் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், இரு மகன்களும் அடங்குவர்.

இந்த ஒன்பது பேரும் மாஜிஸ்திரேட் அமீருல் அசிராப் அப்துல் ரஸீத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

23 வயது தி.லோஹிட விஷ்ணு, 34 வயது பி. குமார், 43 வயது எம். கோமதாஸ், 52 வயது ஆர்.எம். பாண்டியன், 37 வயது எம். பாஸ்கரன், 40 வயது எம். தியாகு, 52 வயது தி.தி. செல்வன் மற்றும் அவரின் இரண்டு மகன்களான 25 மோகன் ராஜ், 28 வயது ​ரூபன் ராஜ் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆவர்.

இந்த ஒன்பது பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஒருவெருக்கொருவர் கற்களை வீசி சண்டையிட்டுக்கொண்டு ரகளைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நி​ருபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 147 ஆவது பிரிவின் ​கீழ் ஒன்பது பேரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

எனினும் ஒன்பது பேரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 2,500 வெள்ளி ஜா​மீனில் விடுவிக்க ​நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவ்வழக்கு வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி ​மீண்டும் ​விசாரணைக்கு வருகிறது.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு