கோலாலம்பூர், மே 06-
நாட்டின், பிரபல தேசிய காற்பந்து வீரரான பைசால் ஹலீம் இன்று அதிகாலை ஆசிட் வீச்சுக்கு ஆளாகினார்.
இது தொடர்பான, புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அடையாளம் தெரியாத ஆசாமிகளால் பைசால் ஹலீம் ஆசிட் வீச்சால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வார தொடக்கத்தில், மற்றொரு தேசிய காற்பந்து வீரரான அக்யார் ரஷித் திரங்கானு அணிக்காக விளையாடும் போது ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகிய நிலையில் தற்போது, பைசால் ஹலீம் - மின் மீது இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.
அவருக்கு தலை மற்றும் உடலில் ஏற்பட்ட படுங்காயங்களால் திரங்கானு, சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துமனையில் சிகிக்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.








