Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சந்தாதாரர்களின் கணக்குகள் சீரமைக்கப்படவிருக்கிறன
தற்போதைய செய்திகள்

சந்தாதாரர்களின் கணக்குகள் சீரமைக்கப்படவிருக்கிறன

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-

தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF, தனது சந்தாதாரர்களின் சேமிப்பு கணக்குகளை இம்மாதம் இறுதியில் சீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது EPF சந்தாதார்கள் அனைவரும் இரண்டு கணக்குகளை கொண்டிருக்கின்றனர். இம்மாதம் இறுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் சீரமைப்பின் வழி 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து சந்தாதாரர்களும் மூன்று கணக்குகளை கொண்டிருக்க வேண்டும்.

முதலாவது கணக்கு Persaraan என்ற பணி ஓய்வுப்பெறும் காலத்திற்குரிய கணக்காகும். அந்திம காலத்திற்கு தேவையான பணத்தை மீட்க மட்டும் இந்த கணக்கு பயன்படுத்தப்படும்.

இரண்டாவது கணக்கு Sejahtera என்ற நல்வாழ்வுக்குரிய கணக்காகும். சந்தாதார்களின் நல்வாழ்வுக்குரிய திட்டத்தை இந்த கணக்கு கொண்டு இருக்கும்.

மூன்றாவது கணக்கான Account 3, நெகிழ்வான கணக்காகும். அத்தியாவசியத் தேவைக்கு பணத்தை மீட்கும் கணக்காக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று கணக்குகளின் விவரங்களையும், அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டு இருப்பதையும், அவற்றின் நோக்கம் யாவை என்பது குறித்தும் இம்மாதம் இறுதியில் EPF. முழுமையாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இரண்டு கணக்காக இருக்கும் EPF. சந்தாதார்களின் கணக்குகள், 55 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் மூன்று கணக்காக மாற்றவதற்கான திட்டத்தை வரும் மே 11 ஆம் தேதி EPF. அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55 வயதுக்கு உட்பட்ட சந்ததாதார்களுக்கு தற்போது உள்ள இரண்டு கணக்குகளில், அவர்களின் 70 விழுக்காடு சேமிப்பு முதல் கணக்கிலும், எஞ்சிய 30 விழுக்காடு சேமிப்பு இரண்டாவது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆனால், இந்த இரண்டு கணக்குகள் மூன்று கணக்குகளாக சீரமைக்கப்படும் போது, அவர்களின் சேமிப்பு, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. முதல் கணக்கில் 75 விழுக்காட்டுத் தொகையும், இரண்டாவது கணக்கில் 15 விழுக்காட்டுத் தொகையும், மூன்றாவது கணக்கில் 10 விழுக்காட்டுத் தொகையும் என அவர்களில் சேமிப்பு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படவிக்கின்றன.

இதனை விவரத்தை EPF வாரியம், இம்மாதம் இறுதியில் அறிவிக்கவிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்