Mar 10, 2026
Thisaigal NewsYouTube
எமிரெட்ஸ் விமானம் கோலாலம்பூரில் அவசரத் தரையிறக்கம்
தற்போதைய செய்திகள்

எமிரெட்ஸ் விமானம் கோலாலம்பூரில் அவசரத் தரையிறக்கம்

Share:

துபாயிலிருந்து சிங்கப்​பூருக்கு 12 இஸ்ரேலிய பயணிகளுடன் சென்று கொண்டிருந்த எமிரெட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இகே 354 விமானம், கோலால​ம்​பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து சிங்கப்பூரை நோக்கி பயணிக்க இயலாமல் அந்த விமானம் நேற்று காலையில் கோலாலம்​​பூரில் அவசரமாக தரையிறங்குவதற்கான அனுமதியைப் பெற்றது. அந்த விமானம், கோலாலம்​பூரில் நிறுத்தப்பட்டு இருந்த வேளையில் பயணிகள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அவசரத் தரையிறக்கத்திற்கான விமானங்கள் நிறுத்தும் இடமான தார்மாக்க்கில் அந்த எமிரெட்ஸ் விமானம் சுமார் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலைமை ​சீரடைந்தப் பின்னர் அந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.மலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் நெடுங்காலமாகவே ​தூதரக உறவு கிடையாது. இந்நிலையில் ஏற்பட்ட அசெளகரியத்திற்காக இஸ்ரேலிய ​தூதகரம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது