Jan 24, 2026
Thisaigal NewsYouTube
எமிரெட்ஸ் விமானம் கோலாலம்பூரில் அவசரத் தரையிறக்கம்
தற்போதைய செய்திகள்

எமிரெட்ஸ் விமானம் கோலாலம்பூரில் அவசரத் தரையிறக்கம்

Share:

துபாயிலிருந்து சிங்கப்​பூருக்கு 12 இஸ்ரேலிய பயணிகளுடன் சென்று கொண்டிருந்த எமிரெட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இகே 354 விமானம், கோலால​ம்​பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து சிங்கப்பூரை நோக்கி பயணிக்க இயலாமல் அந்த விமானம் நேற்று காலையில் கோலாலம்​​பூரில் அவசரமாக தரையிறங்குவதற்கான அனுமதியைப் பெற்றது. அந்த விமானம், கோலாலம்​பூரில் நிறுத்தப்பட்டு இருந்த வேளையில் பயணிகள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அவசரத் தரையிறக்கத்திற்கான விமானங்கள் நிறுத்தும் இடமான தார்மாக்க்கில் அந்த எமிரெட்ஸ் விமானம் சுமார் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலைமை ​சீரடைந்தப் பின்னர் அந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.மலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் நெடுங்காலமாகவே ​தூதரக உறவு கிடையாது. இந்நிலையில் ஏற்பட்ட அசெளகரியத்திற்காக இஸ்ரேலிய ​தூதகரம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு