Aug 6, 2026
Thisaigal NewsYouTube
எமிரெட்ஸ் விமானம் கோலாலம்பூரில் அவசரத் தரையிறக்கம்
தற்போதைய செய்திகள்

எமிரெட்ஸ் விமானம் கோலாலம்பூரில் அவசரத் தரையிறக்கம்

Share:

துபாயிலிருந்து சிங்கப்​பூருக்கு 12 இஸ்ரேலிய பயணிகளுடன் சென்று கொண்டிருந்த எமிரெட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இகே 354 விமானம், கோலால​ம்​பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து சிங்கப்பூரை நோக்கி பயணிக்க இயலாமல் அந்த விமானம் நேற்று காலையில் கோலாலம்​​பூரில் அவசரமாக தரையிறங்குவதற்கான அனுமதியைப் பெற்றது. அந்த விமானம், கோலாலம்​பூரில் நிறுத்தப்பட்டு இருந்த வேளையில் பயணிகள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அவசரத் தரையிறக்கத்திற்கான விமானங்கள் நிறுத்தும் இடமான தார்மாக்க்கில் அந்த எமிரெட்ஸ் விமானம் சுமார் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலைமை ​சீரடைந்தப் பின்னர் அந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.மலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் நெடுங்காலமாகவே ​தூதரக உறவு கிடையாது. இந்நிலையில் ஏற்பட்ட அசெளகரியத்திற்காக இஸ்ரேலிய ​தூதகரம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது