MUAR நாடாளுமன்ற உறுப்பினர் SYED SADDIQ SYED ABDUL RAHMAN தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, அரசியலில் மீண்டும் வெகுண்டெழும் நோக்கில், MUDA கட்சியினர் SUNGAI BAKAP இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.
அவர்களது அந்நடவடிக்கை புரிந்துக்கொள்ளக்கூடியது என்றாலும்கூட, பெரிய கட்சிகளைவிட போதிய நிதி ஆதரவைக் கொண்டிருக்காத மூடா கட்சியினர்ம் அரசியல் வியூகங்களுக்கு ஏற்ப செயல்படுவது அவசியம் என அரசியல் ஆய்வாளர் ASRUL HADI ABDULLAH SANI எச்சரிக்கை விடுத்துள்ளார்.
PKR கட்சிக்கு பாடம் புகட்டுவதே முதன்மை நோக்கமென்றால், MUDA கட்சியினர், அவர்களது அடையாளம், அடிப்படை ஆதரவாளர்கள் முதலான விவகாரங்களைக் கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளைத் தேர்தெடுத்து போட்டியிட வேண்டும்.
மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகளில் அவர்களுக்கு ஒருபோதும் ஆதரவு கிடைக்காது.
ஆகையால், கலப்பு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதில், MUDA கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும் என ASRUL HADI அறிவுறுத்தினார்.








