Sarawak Report சஞ்சிகையின் ஆசிரியரும், தோற்றுநருமான Clare Rewcastle – Brown- க்கு திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
திரெங்கானு சுல்தானா நோர் சஹிராவை அவதூறு செய்த குற்றத்திற்காக, அந்த பத்திரிகை ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே மாஜிஸ்திரேட் நிக் முஹமாட் தர்மிசி நிக் முஹமாட் ஷுக்ரி இத்தண்டனையை விதித்தார்.
“The Inside Story of the 1MDB Expose” என்ற தலைப்பில் Sarawak Report – டின் ஒரு நூலில் திரெங்கானு சுல்தானா நோர் சஹிராவை விற்கு அவதூறு விளைவிக்கும் தன்மையில் செய்தி வெளியிடப்பட்டதாக Clare Rewcastle – Brown- குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.








