Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நேர்மையின் அடையாளமாக திகழும் KK மார்ட் நிறுவன கடை!
தற்போதைய செய்திகள்

நேர்மையின் அடையாளமாக திகழும் KK மார்ட் நிறுவன கடை!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

கோலாலம்பூர், பங்சார்-ரிலுள்ள KK மார்ட் கடைக்கு பொருள் வாங்க சென்றிருந்த நிர்மலா ராமு எனும் வாடிக்கையாளர், பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தும்போது, தெரியாத்தனமாக அவரது பணப்பையை அங்கேயே விட்டுசென்றுள்ளார்.

30 நிமிடங்களுக்கு பிறகு வீட்டை வந்தடைந்தும், தமது பணப்பை காணாமல் போனதை உணர்ந்த அவர், ஒருவேளை அது சம்பந்தப்பட்ட KK மார்ட் கடையில் இருக்குமோ என்ற சந்தேகத்தில் அக்கடைக்கு விரைந்துள்ளார்.

பணத்தை செலுத்துமிடத்தில் வேறொரு கேஷியர் இருந்த நிலையில், அவரிடம் தனது பணப்பை காணாமல் போனதை நிர்மலா விவரித்துள்ளார். சம்பந்தப்பட்ட பணப்பை அவருக்கு சொந்தமானாதா என்பது குறித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு உறுதிபடுத்திய அந்த cashier பின்னர், அந்த பணப்பையை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

தனது பணப்பையில் இருந்த தொகை உட்பட அனைத்தும் திரும்ப கிடைத்ததில் நிம்மதி பெருமூச்சுவிட்ட நிர்மலா, KK மார்ட் கடையின் கேஷியர்-ரின் நேர்மையைப் பாராட்டியுள்ளார்.

அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை விவகாரத்தில் KK மார்ட் நிறுவன கடை, பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டுவரும் சூழலில், இந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Related News