May 22, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டவரிடம் கொள்ளை, ஐந்து போலீஸ்காரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டவரிடம் கொள்ளை, ஐந்து போலீஸ்காரர்கள் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 09-

வெளிநாட்டவர் ஒருவரை மடக்கி விலை உயர்ந்த கைகடிகாரத்தையும், இரண்டு லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தையும் கொள்ளையடித்ததாக நம்பப்படும் ஐந்து போலீஸ்காரர்கள் உட்பட எழுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ்காரர்களுக்கு அப்பாற்பட்டு கைது செய்யப்பட்ட அந்த இரண்டு நபர்களில் ஒருவர் முன்னாள் போலீஸ்காரர் என்றும் மற்றொருவர் பொதுமக்களில் ஒருவர் என்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த எழுவரும் 28 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் ஆவர். இக்கொள்ளை சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் காயமடையவில்லை என்று ருஸ்டி இசா குறிப்பிட்டார்.

உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி மூன்று நபர்களை போலீசார் கைது செய்த வேளையில் அந்நபர் கொடுத்த தகவலின் பேரில் மற்றவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐந்து போலீஸ்காரர்களை ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி தரப்பட்ட வேளையில் மற்றவர்கள் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணை பெறப்பட்டுள்ளதாக ருஸ்டி இசா தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு