Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜாமீன் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது
தற்போதைய செய்திகள்

ஜாமீன் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது

Share:

தவௌ, ஜூன் 13-

கடந்த மார்ச் 22 ஆம் தேதி, 17 வயது தொழிற்கல்லூரி மாணவனை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவ தொடர்பில், லஹாட் டத்து தொழிற்கல்லூரியில் பயிலும் 7 மாணவர்களை ஜாமீனில் விடுவிக்க விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த மனுவை தவௌ உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்த ஏழு மாணவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் டத்தோ ராம் சிங் சமர்பித்த ஜாமீன் விண்ணப்பத்தை விசாரித்து பரிசீலித்த நீதிபதி டத்தோ டங்கன் சிகோடோல் இத்தீர்ப்பை வழங்கினார்.

இவ்வழக்கு இன்னும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் இருப்பதாலும் குற்றச்சாட்டப்பட்டிருபவர்களை ஜாமீனில் விடுவிக்க சிறப்பு சூழ்நிலைகள் எதுவும் கொண்டிருக்காத காரணத்தினாலும் இந்த ஜாமீன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி டத்தோ டங்கன் கூறினார்.

மேலும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டால் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முழு சுதந்திரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, 16 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் கடந்த மார்ச் 21 ஆம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் மார்ச் 22 ஆம் தேதி காலை 7.38 மணி வரையில் Lahad Datu தொழிற்கல்லூரி, 7 ரெசாக் மற்றும் 5 பெலியன்-னில் உள்ள அறையில் 17 வயது பாதிக்கப்பட்ட மாணவனை கொடூரமாக அடித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு