கூகல் மலேசியா என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இணைந்து மலேசிய இந்தியர்களின் சமூகவில், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா, நாடு முழுவதும் உள்ள 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 ஆயிரம் மடிக்கணினிகளை விநியோகிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோ ரா. ரமணன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல், தொழில்நுட்பத் துறையில் போதுமான அடிப்படை ஆற்றலை கொண்டு இருப்பதற்காக சுமார் 30 லட்சம் வெள்ளி செலவில் இதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைகளை மித்ரா மேற்கொண்டு வருவதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் சுங்கை பூலோ எம்.பி.யான டத்தோ ரமணன் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


