Mar 19, 2026
Thisaigal NewsYouTube
குடும்பமாது கஸ்தூரி பாதுகாப்பாக உள்ளார்
தற்போதைய செய்திகள்

குடும்பமாது கஸ்தூரி பாதுகாப்பாக உள்ளார்

Share:

ஜோகூர், மார்ச் 28-

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கூலாயிலிருந்து பகாங், பெந்தோங்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற போது காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட தனது மனைவி கஸ்தூரி சுப்பிரமணியம், பாதுகாப்பாக உள்ளார் என்று கணவர் சி. முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

41 வயது கஸ்தூரியின் பாதுகாப்பு குறித்து கடந்த நான்கு நாட்களாக அவரின் கணவர் முத்துக் குமாரும் மூன்று பிள்ளைகளும், கவலையுற்று இருந்த நிலையில் தாம் பாதுகாப்பான ஓர் இடத்தில் இருப்பதாக தமது மனைவி குறிப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாக கணவர் முத்துக்குமார் திசைகளிடம் தெரிவித்துள்ளார்.

ஜோகூர், குலாய், பண்டார் புத்ரா, லோரோங் பங்காவு- வை சேர்ந்த கஸ்தூரி கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணியளவில் பெந்தோங்கில் உள்ள தமது தாயார் வீட்டிற்கு புறப்பட்ட நிலையில் அதற்கு அவரின் கைப்பேசி தொடர்பு கிடைக்காததைத் தொடர்ந்து மனைவியின் பாதுகாப்பு கருதி, கணவர் முத்துக்குமார் கோலாலம்பூர் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை