நெகிரி செம்பிலான் யாங் டிபெர்துவான் பெசார் துங்கு முஹ்ரிஸ் துங்கு முனாவீர், தனது இரண்டாவது புதல்வரான துங்கு ஜைன் அல்-ஆபிதீன் அவர்களை துங்கு பாங்லிமா பெசார் ஆக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனாந்தியில் நடைபெற்ற பாரம்பரியமிக்க அரச விழாவில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. மேலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துங்கு ஜைன் அல்-ஆபிதீன், மாநிலத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் மக்களின் நலன்களைப் பேணுவதிலும் முக்கியப் பங்காற்றுவார் என்று துங்கு முஹ்ரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
44 வயதான இளவரசர் துங்கு ஜைன் அல்-ஆபிதீன், கல்வி, கார்ப்பரேட் மற்றும் சமூகத் துறைகளில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








