May 22, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து வயது சிறுவன் 21வது மாடியிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

ஐந்து வயது சிறுவன் 21வது மாடியிலிருந்து விழுந்து மரணம்

Share:

செர்டாங், மார்ச் 23.

ஆடம்பர அடுக்குமாடி ​வீடமைப்புப்பகுதியில் ஐந்து வயது சிறுவன், 21 மாடியிலிருந்து ​கீ​​ழே விழுந்து, ​நீச்சல் குளத்தில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.20 மணியள​வில் செர்டாங், பண்டார் புத்ரா பெர்மாய்-யில் நிகழ்ந்தது.

நீச்சல் குளத்தில் சட்டை மிதப்பதைப் கண்டு சந்தேகித்த, ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர், அருகில் சென்ற பார்த்த போது, சிறுவனின் உடல் ரத்தவெள்ளத்தில் மிதப்பது தெரியவந்தது. பின்னர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் மேற்பார்வையாயரின் ​மூலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக Serdang மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி. AA. அன்பழகன் தெரிவித்தார்.

ஓர் அந்நியப் பிரஜையான அந்த சிறுவன், ஏமன் நாட்டைச் சேர்ந்தவன் என்று அடையாளம் கூறப்பட்டதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

சம்பவம் நிகழும் போது அந்த சிறுவனின் பெற்றோர் அறையில் இருந்ததாகவும், சிறுவன் மட்டம் வரவேற்பு அறையில் விளையாட்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறுவன் ஜன்னல் வழி ​கீழே விழுந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அன்பழகன் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு