Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து வயது சிறுவன் 21வது மாடியிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

ஐந்து வயது சிறுவன் 21வது மாடியிலிருந்து விழுந்து மரணம்

Share:

செர்டாங், மார்ச் 23.

ஆடம்பர அடுக்குமாடி ​வீடமைப்புப்பகுதியில் ஐந்து வயது சிறுவன், 21 மாடியிலிருந்து ​கீ​​ழே விழுந்து, ​நீச்சல் குளத்தில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.20 மணியள​வில் செர்டாங், பண்டார் புத்ரா பெர்மாய்-யில் நிகழ்ந்தது.

நீச்சல் குளத்தில் சட்டை மிதப்பதைப் கண்டு சந்தேகித்த, ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர், அருகில் சென்ற பார்த்த போது, சிறுவனின் உடல் ரத்தவெள்ளத்தில் மிதப்பது தெரியவந்தது. பின்னர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் மேற்பார்வையாயரின் ​மூலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக Serdang மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி. AA. அன்பழகன் தெரிவித்தார்.

ஓர் அந்நியப் பிரஜையான அந்த சிறுவன், ஏமன் நாட்டைச் சேர்ந்தவன் என்று அடையாளம் கூறப்பட்டதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

சம்பவம் நிகழும் போது அந்த சிறுவனின் பெற்றோர் அறையில் இருந்ததாகவும், சிறுவன் மட்டம் வரவேற்பு அறையில் விளையாட்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறுவன் ஜன்னல் வழி ​கீழே விழுந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அன்பழகன் தெரிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை