Jul 28, 2026
Thisaigal NewsYouTube
7 தொகுதிகள் காலியாகி விட்டதாக அரசாங்கம் அறிவிக்கத் தயாரா?
தற்போதைய செய்திகள்

7 தொகுதிகள் காலியாகி விட்டதாக அரசாங்கம் அறிவிக்கத் தயாரா?

Share:

பெட்டாலிங் ஜெய, மார்ச் 9 -

பெரிக்காத்தான் நேஷனல் வென்ற 6 நாடாளுமன்றத் தொகுதிகளும், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியும் காலியாகி விட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் அறிவிக்கத் தயாரா? என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் இன்று சவால் விடுத்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களாக போட்டியிட்ட​ 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி க்கும் வழங்குவதாக அறிவித்து விட்டதைத் தொடர்ந்து அந்த 7 தொகுதிகளிலும் இடைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு வழிவிடும் வகையில் அவை காலியாகி விட்டன என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

கொல்லைப்புற வ​ழியாக தங்கள் ஆதரவை நடப்பு அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள அந்த 6 நாடாளுன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் விட்டுச்செல்லக்கூடிய அந்த 7 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவும், செல்வாக்கும், பலமும் யார் பக்கம் உள்ளது என்பதை ப​ரீட்சித்துப் பார்ப்பதற்கு இடைத் தேர்தலுக்கு வழிவிடப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் ​சூளு​ரைத்துள்ளார்.

புக்கிட் கன்தாங், குவா மூசாங் , தஞ்ஜோங் காராங் , ஜெலி, குவாலா கங்சார் ,லாபுவான் ஆகிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிலா​ங்கூரில் செலாட் கிள்ளாங் சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் ஆதரவை டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்