Jul 27, 2026
Thisaigal NewsYouTube
குப்பாங் சிப்பிகளை உட்கொள்ள விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

குப்பாங் சிப்பிகளை உட்கொள்ள விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது

Share:

போர்ட் டிக்சன், ஏப்ரல் 23-

நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன் நீர்பகுதியிலிருந்து குப்பாங் எனப்படும் சிப்பிகளை எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னமும் தொடர்வதாக, அம்மாநில மீன்வளத்துறை இயக்குநர் காசிம் தாவே தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நீர் பகுதியிலிருந்து மூன்றாவது முறையாக எடுக்கப்பட்ட சிப்பிகள் மற்றும் நீர் மாதிரிகளை, கோலாலம்பூர்-ரிலுள்ள மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையத்தில் சோதனைக்கு உட்படுத்தியதில், அவற்றில் அளவுக்கு அதிகமான உயிர் நச்சுகள் உள்ளது கண்டறியப்பட்டதால் அது உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்றாரவர்.

தற்போது, நான்காவது முறையாக அப்பகுதியிலிருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன் முடிவு ஏப்ரல் 26ஆம் தேதி தெரியவரும் என காசிம் தாவே கூறினார்.

ஏப்ரல் 2ஆம் தேதி, போர்ட் டிக்சன் நீர்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருந்த குப்பாங் வகை சிப்பிகளை உண்டிருந்த எண்மர், நச்சுணவு பாதிப்புக்கு இலக்காகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்