Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இந்திய சமூகத்திற்கு உதவுவதால் மலாய் சமூகத்தினரின் ஆதரவை இழந்துவிட மாட்டீர்கள்! -பிரதமருக்கு செனட்டர் சிவராஜ் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

இந்திய சமூகத்திற்கு உதவுவதால் மலாய் சமூகத்தினரின் ஆதரவை இழந்துவிட மாட்டீர்கள்! -பிரதமருக்கு செனட்டர் சிவராஜ் நினைவுறுத்து

Share:

பெடாலிங் ஜெயா, மார்ச் 19 -

இந்திய சமூகத்தின் சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் கடப்பாட்டைக் கொண்டிருந்தால் பிரதமர் டத்துக் ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் METRICULATION-னில் அச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஈராயிரத்து 500 இடங்களை வழங்க வேண்டும் என அரசாங்க தரப்பு செனட்டர் சி.சிவராஜ் வலியுறுத்தினார்.

அனைத்து விவகாரங்களிலும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்திய சமூகத்திற்கு உதவிகள் தேவைப்படுவது பரவலாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆகையால், இந்திய சமூகத்திற்கு உதவுவதால், தமக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு கிடைக்காது என பிரதமர் பயப்படக்கூடாது எனவும் அவர் நினைவுறுத்தினார்.

அனைத்து சமூகத்தினரையும் பிரதமர் சரிசமமாக நடத்துவது அவசியம். இந்திய சமூகத்திற்கு பிரதமர் உதவினால், சீன மற்றும் மலாய் சமூகத்தினர்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள். அவ்விரு சமூகத்தினரும் ஒருபோதும், அவருக்கான ஆதரவை மீட்டுக்கொள்ள மாட்டார்கள்.

வறுமையில் வாடும் இந்திய சமூகத்தை அதிலிருந்து மீட்கவும் சிறந்த கல்வி வாய்ப்பை வழங்கவும் METRICULATION-னில் இந்திய மாணவர்களுக்கு ஈராயிரத்து 500 இடங்களைப் பிரதமர் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு அவ்விவகாரம் குறித்து தாம் எடுத்துரைத்த போதிலும் பிரதமரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காததை சி.சிவராஜ் நேற்றைய மேலவையில் சுட்டிக்காட்டினார்.

2017ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு ஆயிரத்து 600 இடங்களை வழங்கியிருந்த அப்போதைய பிரதமர் டத்துக் ஶ்ரீ நஜி துன் ராசாக் , 2018ஆம் ஆண்டில் ஈராயிரத்து 200 இடங்களை வழங்கவும் இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவருக்கு பிந்தைய ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை ஈராயிரத்திற்கு குறைவாக உள்ளது. கடந்தாண்டு மிக மிக குறைவான இடங்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மலாய் அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடங்களே ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், சீன மாணவர்களுக்கு 5.4 விழுக்காடு இடங்கள் வழங்கப்படும் வேளை, எஞ்சிய இடங்களே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக, சி.சிவராஜ் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

இந்திய சமூகத்திற்கு உதவுவதால் மலாய் சமூகத்தினரின் ஆதரவை இ... | Thisaigal News