Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கார் மீது மரம் விழுந்து ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கார் மீது மரம் விழுந்து ஆடவர் பலி

Share:

சிரம்பான், ஏப்ரல் 4 -

ஆடவர் ஒருவர் செலுத்திய போரோடுவா வீவா கார் மீது, மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு விழுந்ததில் அந்நபர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று மாலை 4.11 மணியளவில் சிரம்பான், தாமான் ரஷிடா உத்தாமா அருகில் ஜாலான் செனாவாங் போரையில் நிகழ்ந்தது.
பலத்த காற்றுக்கு மத்தியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காரோட்டியான 48 வயது மா காமால் மாஸ்ரி என்பவர் உடல் நசுங்கி ஸ்தலத்திலே மாண்டார்.

தகவல் கிடைத்து ஐந்தே நிமிடத்தில் சம்பவ இடத்தை சென்றடைந்த செனாவாங் தீயணைப்பு, மீட்பு நிலைய வீரர்கள், மரக்கிளைகளை அகற்றி, இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த காரோட்டியின் உடலை மீட்டனர் என்று அதன் தலைவர் மொகமாட் நாஸ்ரி அரிஸ் தெரிவித்தார்.

Related News